ஐஸ் குச்சியில்  அதிசயம்!

ஐஸ் குச்சிகள், செராமிக், களிமண், போன்றவற்றைப் பயன்படுத்தி பல்வேறு புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களான தாஜ்மகால், வள்ளுவர் கோட்டம், பாரீசில் உள்ள
ஐஸ் குச்சியில்  அதிசயம்!
Updated on
1 min read

ஐஸ் குச்சிகள், செராமிக், களிமண், போன்றவற்றைப் பயன்படுத்தி பல்வேறு புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களான தாஜ்மகால், வள்ளுவர் கோட்டம், பாரீசில் உள்ள ஈபில் கோபுரம் போன்றவற்றின் மாதிரிகளை உருவாக்குகிறார், திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு கவின்கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
 அவரிடம் பேசினோம்:
 ""நான் 6-ம் வகுப்பு பயிலும் போதே, களிமண்ணால் ஆன மரச்சிற்பத்தை வடிவமைத்தேன். தொடர்ந்து ஐஸ் குச்சிகளைக் கொண்டு தாஜ்மகால், பாரிஸில் உள்ள ஈபில்கோபுரம் போன்றவற்றின் மாதிரிகளை வடிவமைத்தேன். நான் வடிவமைத்த சிற்பங்களிலேயே ஈபில் கோபுர மாதிரியை தயார் செய்ய ஒரு மாத காலம் ஆகியது.
 இதுதவிர செராமிக் ஓவியம் வரைவது, ஆயில் பெயிண்டிங் போன்றவற்றிலும் எனக்கு ஈடுபாடு அதிகம். சென்னை, மதுரை, பெங்களூர் போன்ற பல்வேறு நகரங்களில் எனது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
 சிற்பங்களின் தன்மை, வகைக்கு ஏற்ப விலை கிடைக்கும். அதிகபட்சமாக திருநெல்வேலியில் ஒருவருக்கு செய்து அளித்த டெரகோட்டா சிற்பம் ரூ.1 லட்சத்துக்கு விலை போனது. டெரோகோட்டா சிற்பங்களை வடிவமைக்க ஒரு வார காலம் தேவைப்படுகிறது.
 எதிர்காலத்தில் சிறுவர், சிறுமியருக்கு ஓவியக்கலை, சிற்பங்களை வடிவமைப்பது குறித்து பயிற்றுவிப்பது எனது தலையாய நோக்கமாக கொண்டுள்ளேன்'' என்கிறார் அலெக்சாண்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com